1. Home
  2. தமிழ்நாடு

சர்ச்சை! ஹெல்மெட் போடவில்லை என்று கார் ஓட்டுநருக்கு அபராதம்!!

சர்ச்சை! ஹெல்மெட் போடவில்லை என்று கார் ஓட்டுநருக்கு அபராதம்!!


ஹெல்மெட் அணியாத குற்றத்திற்காக கேரளாவில் கார் ஓட்டுநர் ஒருவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார் வைத்திருக்கும் அஜித் என்பவருக்கு ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி போக்குவரத்து காவல்துறையினர் ரூ.500 அபராதம் விதித்தனர். தலையில் தலைக்கவசத்தை அணிந்து மோட்டார் சைக்கிளை ஓட்டாதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரசீது வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவரிடம் இரு சக்கர வாகனமே இல்லை என்பதுதான். இதனால் இந்த பிரச்னை சர்ச்சையாகியுள்ளது. விசாரணையில் கேமரா காட்சிப்பதிவின் அடிப்படையில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது தெரிய வந்தது.

சர்ச்சை! ஹெல்மெட் போடவில்லை என்று கார் ஓட்டுநருக்கு அபராதம்!!

டிசம்பர் 7, 2021 அன்று ஹெல்மெட் அணியாமல் பைக்கில் இரண்டு பேர் சென்றனர். பைக்கின் பதிவு எண்ணின் கடைசி இரு இலக்கங்கள் சரியாக தெரியாத நிலையில் அந்த இரு இலக்கங்களை “77” என்று முடிவு செய்து அஜித்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த இரு இலக்கங்கள் “11” என்று கூறும் அஜித்தான் அபராதம் செலுத்தப்போவதில்லை. மோட்டார் வாகன அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like