ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி!!
ஈரோட்டில் ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடார்மேட்டை சேர்ந்த வர்ஷினி என்பவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் வழக்கம்போல ஈரோடு நாடார்மேடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து கல்லூரி பேருந்தில் ஏறினார்.
பேருந்து சாஸ்திரி நகர் பிரிவு வளைவில் சென்றுகொண்டிருந்தபோது முன்பக்க கதவு எதிர்பாராத விதமாக திறந்ததில் பேருந்தில் இருந்த மாணவி வர்ஷினி தவறி சாலையில் விழுந்தார்.
அதில் மாணவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்நது பேருந்தில் இருந்த சக மாணவிகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வர்ஷினியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தொடர்ந்து மாணவிக்கு தீவிர சிசிக்கை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
newstm.in