1. Home
  2. தமிழ்நாடு

தபால்துறை ஊழியரின் பணியைக் கூட செய்ய மறுப்பது ஆளுநருக்கு அழகல்ல - முதல்வர் மு.க.ஸ்டாலின்

தபால்துறை ஊழியரின் பணியைக் கூட செய்ய மறுப்பது ஆளுநருக்கு அழகல்ல - முதல்வர் மு.க.ஸ்டாலின்


சென்னை, பெரியார் திடலில் தி.க மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், கருப்பையும், சிவப்பையும் ஒருபோதும் பிரிக்க முடியாது. திராவிட சிந்தனை இந்தியா முழுவதும் பரவுவது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.

நீட் விலக்கு சட்ட முன்வடிவிற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து பேசிய அவர், மக்களை விட ஆளுநர்கள் அதிகாரம் மிக்கவர்களா? இல்லை. அப்படி ஒரு எண்ணம் இருந்தால், மாற்றிக்கொள்ள வேண்டும்.

நீட் விலக்கு சட்ட முன்வடிவிற்கு ஒப்புதல் அளிக்கக்கூடிய அதிகாரம் ஆளுநரிடம் இல்லை. ஆளுநரிடம் எதிர்பார்ப்பது சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பும் ‘போஸ்ட் மேன்’ வேலையை மட்டுமே. தபால்துறை ஊழியரின் பணியைக் கூட செய்ய மறுப்பது ஆளுநருக்கு அழகல்ல என்று கூறினார்.

Trending News

Latest News

You May Like