1. Home
  2. தமிழ்நாடு

அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் : முதலமைச்சர்!!

அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் : முதலமைச்சர்!!


"அக்னிபத்எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்" என தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இராணுவத்தில் ஒப்பந்த முறையில் ஆள் சேர்ப்பதற்கு ஒன்றிய பா... அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ளஅக்னிபத்திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டின் பாதுகாப்பின் மீது அக்கறை கொண்டுள்ள பல முன்னாள் ராணுவ அதிகாரிகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். மாதமிருமுறை வெளிவரும் பிரபல ஃப்ரன்ட்லைன் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், முன்னாள் மேஜர் ஜெனரல் ஜி.டி பக்ஸி, “இத்திட்டத்தைக் கேள்விப்பட்டுத் திடுக்கிட்டுப் போனேன் என தனது அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் : முதலமைச்சர்!!

இன்னொரு ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராஜ் கத்யன், 4 ஆண்டு ஒப்பந்தப் பணியில் சேரும் இராணுவ வீரர், தன் உயிரைத் தியாகம் செய்யும் அளவிற்குப் போரில் பணியாற்றுவார் என எதிர்பார்க்க முடியாது என்று கவலை தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் தவிர, நாட்டின் பாதுகாப்புப் பணியில் பல்லாண்டுகள் பணியாற்றிய பல முன்னாள் இராணுவ அதிகாரிகளும், “இராணுவப் பணி பகுதிநேரப் பணிஅல்ல என்றும், இந்தத் தேர்வுத் திட்டம் ஆபத்தானது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்திய நாட்டின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, இலட்சக்கணக்கான இளைஞர்களின் இராணுவப் பணி எனும் இலட்சியத்தைச் சிதைக்கும் இந்த அக்னிபத் எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like