1. Home
  2. தமிழ்நாடு

சுற்றுலாப் பயணிகளுக்கு கொண்டாட்டம்.. இன்று முதல் மீண்டும் திறப்பு..!!

சுற்றுலாப் பயணிகளுக்கு கொண்டாட்டம்.. இன்று முதல் மீண்டும் திறப்பு..!!


சென்னை மட்டுமல்லாது பக்கத்து மாவட்டங்களில் இருக்கும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் விரும்பி செல்லும் இடம் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவாகும். சுமார் கால் நூற்றாண்டுகளாக இப்போதும், எப்போதும் வண்டலூர் உயிரியல் பூங்கா தொடர்ந்து பரவசமூட்டும் இடமாக இருந்து வருகிறது.

இந்தநிலையில், வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், கொரோனா காலகட்டத்தில் மூடப்பட்ட 7 பார்வையாளர்கள் காணும் இருப்பிடங்கள் படிப்படியாக பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகளுக்கு கொண்டாட்டம்.. இன்று முதல் மீண்டும் திறப்பு..!!

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பாம்புகள் இருப்பிடம் ஊர்வன இல்லம், இரவு விலங்குகள் இருப்பிடம் மற்றும் சிறுவர் பூங்கா போன்றவை, முதல் கட்டமாக கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகி்றது.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் ஒன்றான, சிறுவர் பூங்கா வார நாட்களில் மட்டும் பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும். வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் சிறுவர் பூங்காவுக்கு அனுமதியில்லை என பூங்கா நிர்வாக தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கு கொண்டாட்டம்.. இன்று முதல் மீண்டும் திறப்பு..!!

கோடைக் காலங்களில் பூங்காவில் இருக்கும் யானைகளுக்கு குளு குளு ஷவர் குளியல் கொடுக்கப்படும். அதனை பார்ப்பதற்காகவே மே, ஜூன் மாதங்களில் ஏராளமான குழந்தைகள் பூங்காவுக்கு வருகை தருவார்கள்.

newstm.in

Trending News

Latest News

You May Like