1. Home
  2. தமிழ்நாடு

பள்ளியில் சாதி மோதல்.. 17 வயது மாணவர் உயிரிழந்த சோகம் !!

பள்ளியில் சாதி மோதல்.. 17 வயது மாணவர் உயிரிழந்த சோகம் !!


பள்ளியில் 17 வயது மாணவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 25ஆம் தேதி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அதாவது, சாதிய ரீதியாக கலர் கயிறு கட்டுவது தொடர்பாக மாணவர்கள் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் 12ஆம் வகுப்பு பயிலும் செல்வசூரியன் என்ற மாணவனை சக மாணவர்கள் தாக்கியுள்ளனர். பெல்ட் மற்றும் கற்கள் கொண்டு தலையில் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

பள்ளியில் சாதி மோதல்.. 17 வயது மாணவர் உயிரிழந்த சோகம் !!

தாக்குதலில் காயமடைந்த மாணவனை அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மாணவன் செல்வசூரியன் மருத்துவமனையில் உயிரிழந்தார். இது தொடர்பாக அதே பள்ளியில் பயிலும் +1 மாணவர்கள் 3 பேர் மீது பாப்பாக்குடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மாணவர்களிடையே சாதி மோதலில் மாணவன் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பதற்றமான சூழல் நீலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


newstm.in

Trending News

Latest News

You May Like