1. Home
  2. தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் காலி பணியிடம் நிரப்பும் அறிவிப்பு ரத்து..!

ரேஷன் கடைகளில் காலி பணியிடம் நிரப்பும் அறிவிப்பு ரத்து..!


திருவள்ளூர் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு நிறுவனம் நடத்தும் ரேஷன் கடைகளில் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி, காலி பணியிடங்களுக்கு விண்ணப்பம் பெறப்பட்டது.

அதன்படி, காலியாக இருந்த 79 விற்பனையாளர், 20 கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதே ஆண்டு டிசம்பர் மாதம் 7 முதல் 24-ம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில், “2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி, கூட்டுறவுத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு மற்றும் 2020-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் வாயிலாக விற்பனையாளர் மற்றும் கட்டுநர் காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பும் ரத்து செய்யப்படுகிறது” என்று, திருவள்ளூர் மாவட்ட இணை பதிவாளர் மற்றும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவர் பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like