மூன்று நாட்கள் அரைக்கம்பத்தில் அதிமுக கொடிகள் பறக்க விடப்படும்- ஓபிஎஸ்
அதிமுகவுக்கு இரட்டை இலையை தந்த, அக்கட்சிக்கு முதல் வெற்றியை தந்த மாயத்தேவ காலமானார். இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தினை துவக்கியதற்கு பிறகு முதன்முறையாக நடைபெற்ற திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் கழகத்தின் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு கழகத்திற்கு வெற்றிக் கனியை பறித்துக்கொடுத்த வரும்,
இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்தவரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய வருமாறு மாய தேவர் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாகவும், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இன்று முதல் மூன்று நாட்கள் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடிகள் அனைத்து இடங்களிலும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு முதன்முறையாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கழகம் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிக்கனியை பறித்துக் கொடுத்த கழக முதல் எம்.பி மாயத்தேவர் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாதது! என்று ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
திரு.மாயத்தேவர் அவர்களின் மறைவிற்கு துக்கம் அனுசரிக்கும் விதமாகவும், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இன்று முதல், மூன்று நாட்கள் கழகத்தின் கொடிகள் அனைத்து இடங்களிலும் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். pic.twitter.com/b6by7V05jJ
— O Panneerselvam (@OfficeOfOPS) August 9, 2022