கொரோனாவில் இருந்து இன்று 94 பேர் குணமடைந்தனர்.. உயிரிழந்தது எத்தனை பேர்.?
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 94 மீண்ட நிலையில் இதுவரை 960 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,821 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு நிலவரம்:
நேற்று வரை - 1755
இன்று மட்டும் - 66
மொத்தம் - 1821
இன்று மட்டும் எங்கெல்லாம் பாதிப்பு ஏற்பட்டது என்ற விவரம்:-
சென்னை - 43
செங்கல்பட்டு - 1
காஞ்சிபுரம் - 7
மதுரை - 4
பெரம்பலூர் - 2
தென்காசி - 5
திருவண்ணாமலை -1
விழுப்புரம் - 1
விருதுநகர் - 2
ஆண்கள் - 38
பெண்கள் - 28
10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் : 7
70 வயதைக் கடந்தோர் - 3.
newstm.in