1. Home
  2. தமிழ்நாடு

7 கி.மீ. நடந்தே சென்று குழந்தை பெற்ற கர்ப்பிணி! பதறவைக்கும் சம்பவம்!!

7 கி.மீ. நடந்தே சென்று குழந்தை பெற்ற கர்ப்பிணி! பதறவைக்கும் சம்பவம்!!


பெங்களூருவில் மருத்துவமனையை தேடி, சுமார் 7 கிலோமீட்டர் நடந்தே சென்ற இளம் பெண்ணிற்கு பல் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. 

நிறைமாதக் கர்ப்பிணியான பெண் ஒருவர் திடீரென தனக்கு வயிற்று வலி ஏற்படவே தனது கணவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனை ஏதும் அருகில் உள்ளதா என தேடி சுமார் 7 கிலோமீட்டர் நடந்துள்ளார். 7 கிலோமீட்டர் நடந்தே சென்ற அவர்கள் அந்த பகுதியில் உள்ள பல் மருத்துவமனை ஒன்றிற்குள் சென்றுள்ளனர். அங்கு இருந்த பல் மருத்துவர் ரம்யா இளம் பெண்ணின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கர்ப்பிணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். இந்நிலையில் அந்த பெண்  5-10 நிமிடங்களில் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர், தாய் சேய் இருவரையும் கே.சி. அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இருவரும் நலமாக இருப்பதாக பல் மருத்துவர் ரம்யா தெரிவித்துள்ளார்.    

newstm.in

Trending News

Latest News

You May Like