3 நாட்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி! மெட்ரோ ரயில்களில் அதிரடி!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாள்கள் மெட்ரோ ரயிலில் 50 சதவீதம் கட்டண தள்ளுபடி வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிா்வாகம் அறிவித்துள்ளது.
குறிப்பாக ஜனவரி 17- ஆம் தேதி காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் பெரும்பாலும் சென்னை மெரினா கடற்கரைக்கு வருவார்கள் என்பதால், அன்றைய தினம் அரசினர் தோட்டம், டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மெரினா கடற்கரை வரை பயணிகளின் வசதிக்காக சீருந்து இணைப்பு சேவைகள் (CAB)இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in