அதிர்ச்சி தகவல்... கொரோனா பாதிப்பால் 2.6 கோடி பேர் வேலையிழப்பு!
அமெரிக்காவில் மேலும் 44 லட்சம் பேர் வேலைவாய்ப்பில்லை என பதிவு செய்துள்ளதால் அங்கு வேலையில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 60 லட்சமாக அதிகரித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் லட்சக்கணக்கானவர்கள் வேலையை இழந்துள்ளனர். வேலையை இழந்து அதற்கான உதவித்தொகை கேட்டு அரசிடம் பதிவு செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் அமெரிக்காவில் வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை 20 சதவிகிதமாக அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. 1929ஆம் ஆண்டுக்கு பிறகு இப்படி ஒரு மோசமான நிலையை அமெரிக்க சந்தித்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
newstm.in