14ஆவது ஐபிஎல் திருவிழா இன்று தொடக்கம்! பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!!
14ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொடங்குகிறது. கொரோனா பரவல் இருப்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் ஆறு நகரங்களில் மட்டும் நடத்தப்படுகின்றன. சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய நகரங்களில் லீக் போட்டிகளும், பிளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத் மோடி மைதானத்திலும் நடைபெறுகிறது.
கொரோனோ பரவல் காரணமாக ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. அத்துடன் எட்டு அணிகளுக்கும் சொந்த மைதானத்தில் போட்டிகள் நடைபெறாது.
சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் அணி விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்துகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை தோனி, ரெய்னா, டு பிளஸி, ராயுடு, ஜடேஜா, உத்தப்பா, பிராவோ போன்ற நட்சத்திர வீரர்கள் தேசிய அணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள்.
அதனால் அவர்கள் கடந்த ஐ.பி.எல் தொடருக்கு பிறகு மற்ற போட்டிகளில் விளையாடாமல் நேரடியாக நடப்பு தொடரில் களமிறங்குகின்றனர். ஆறு மாதங்களுக்கு முன்பு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றதால் அவர்கள் இப்போதும் ஃபார்மில் இருப்பார்கள் என்று நம்பலாம்.
newstm.in