1. Home
  2. தமிழ்நாடு

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தலா 1 லிட்டர் பெட்ரோல்..!

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தலா 1 லிட்டர் பெட்ரோல்..!


திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், 18 வயதிற்கு மேற்பட்ட தகுதியுடையவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவதற்கு ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அமைப்பினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், திருவண்ணாமலை அருகில் உள்ள நல்லவன் பாளையத்தில் நடைபெற்ற முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட பொது மக்களை ஊக்குவிக்கும் வகையில், தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி அசோசியேசன் சார்பில் தலா 1 லிட்டர் பெட்ரோல், அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் மற்றும் பிஸ்கட் பாக்கெட் ஒன்று வழங்கப்பட்டது.

இந்த முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வந்த கலெக்டர் முருகேஷ், பெட்ரோல் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி அசோசியேஷன் நிர்வாகிகளை பாராட்டினார். இதில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் கலெக்டர் பிரதாப், வட்டார போக்குவரத்து அலுவலர் குமரா, ஊராட்சி மன்றத் தலைவர் ரவி, தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி அசோசியேஷன் பாலு உள்பட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Trending News

Latest News

You May Like