1. Home
  2. தமிழ்நாடு

பள்ளியில் தற்கொலைப் படை தாக்குதல்.. பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு..!

பள்ளியில் தற்கொலைப் படை தாக்குதல்.. பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு..!

ஆப்கன் பள்ளியில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆகவும், படுகாயமடைந்தோரின் எண்ணிக்கை 110 ஆகவும் உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷ்ட்-இ-பார்ச்சி நகரில் தனியாருக்குச் சொந்தமான உயர் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 30-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இந்த கல்வி மையத்தில் ஏராளமான மாணவ - மாணவிகள் மாதிரி தேர்வை எழுதிக் கொண்டிருந்தனர்.


அப்போது கல்வி மையத்துக்குள் நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர், தனது உடலில் கட்டிக் கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் சிக்கி 35 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 80-க்கும் அதிகமானோர் பலத்த காயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், காபூல் பள்ளியில் நடந்த தற்கொலைப் படைத்தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்படி, 46 பெண் குழந்தைகள் உட்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பெண்கள் உட்பட 110 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like