கால்பந்து போட்டிக்கு 50ஜிபி இலவச டேட்டா: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை..!
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க 50ஜிபி இலவச டேட்டா தருவதாக சமூக வலைதளங்களில் வரும் பதிவு போலியானது என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கத்தாரில், உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடர் நடைபெற்ற வருகிறது. இந்நிலையில், 'உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை காண 50 ஜிபி டேட்டா இலவசம்' என்று ஒரு செய்தி சமூகவலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதனைக் குறிப்பிட்ட நபர்களுக்கு ஷேர் செய்தால் உங்களுக்கு 50 ஜிபி டேட்டா இலவசம் என அதில் குறிப்பிடப்பட்டிருப்பதால் பலரும் இதனை நம்பி அந்த செய்தியை வெகுவாக பரப்பி வருகிறார்கள்.
இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை காண 50 ஜிபி டேட்டா இலவசம் என்று வரும் லிங்கை ஓபன் செய்ய வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 50 ஜிபி டேட்டா தருவதாக கூறும் ஆசைவார்த்தைகளை நம்பி எந்த இணைப்பையும் கிளிக் செய்யாதீர்கள். அவ்வாறு செய்தால் உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்று பொதுமக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.