1. Home
  2. விளையாட்டு

இந்திய அணி வெற்றி..!! ரூ.5 கோடி பரிசு அறிவிப்பு..!!

இந்திய அணி வெற்றி..!! ரூ.5 கோடி பரிசு அறிவிப்பு..!!

பெண்களுக்கான ஜூனியர் 20 ஓவர் உலக கோப்பை தொடர் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்றது. இதில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 அணிகள் இடம்பெற்றன. இதில், குரூப் 1 பிரிவில் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதேபோல் குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இந்திய அணி அரைஇறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. லீக் மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்றில் தோல்வியை சந்திக்காத இங்கிலாந்து அணி அரைஇறுதியில் 3 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டியை எட்டியது.

இந்நிலையில், இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு மிகப்பெரிய பரிசு ஒன்றை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுகுறித்து குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், வெற்றி பெற்ற அணிக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த சாதனை நாம் அனைவருக்கும் பெருமை வாய்ந்த தருணமாக அமைகிறது. இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை நாம் ஆதரிக்க வேண்டுவதற்கு வலு சேர்க்கிறது என கூறியுள்ளார்.



Trending News

Latest News

You May Like