காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை போட்டியில் இருந்து பும்ரா விலகல்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!
இந்திய அணி தற்போது தென் ஆப்ரிக்க அணியுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிக் கொண்டு இருக்கிறது. ஏற்கனவே திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி பவுலிங்கிங்கில் சரிவரி செயல்படுவதில்லை என்று எழுந்த குறை நேற்றைய போட்டியில் முறியடிக்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்க அணியிடம் 106 ரன்களை விட்டுக் கொடுத்து விளையாடிய இந்திய அணியில் அம்பரா இடம்பெறாதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. விரைவில் அவர் களத்தில் இறங்குவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்காக வருகிற 6ம் தேதி (அக்டோபர் மாதம்) இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்பட உள்ளதால் பும்ரா அணியில் இடம்பெறுவார் என்று நினைத்தனர்.
இந்தநிலையில், காயம் காரணமாக 4 மாதங்களுக்கு பும்ரா கிரிக்கெட் விளையாட முடியாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி டி20 உலகக்கோப்பை தொடரில் பும்ரா பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் கலந்த வருத்தத்தில் உள்ளனர்.
விரைவில் பும்ரா குணமடைந்து கிரிக்கெட் களத்தில் இறங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.