1. Home
  2. தமிழ்நாடு

மதுரை அருகே 20 நாட்களுக்கு முன்பு மாயமான சிறுமி வீட்டின் பரணில் சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு..!!

மதுரை அருகே 20 நாட்களுக்கு முன்பு மாயமான சிறுமி வீட்டின் பரணில் சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு..!!

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரம் சோலைஅழகுபுரம் வ.உ.சி. தெருவில் வசித்து வருபவர் காளிமுத்து. தையல் தொழிலாளியான இவருக்கு பிரியதர்ஷினி என்கிற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கனிஷ்கா (9) என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்ததார்.

இந்த நிலையில் கடந்த 2ம் தேதி காளிமுத்துவும், மகள் கனிஷ்காவும் திடீரென மாயமாகி உள்ளனர். இதனால் இருவரையும் பிரியதர்ஷினி பல இடங்களில் தேடியுள்ளார். எங்கு தேடியும் இருவர் குறித்த தகவல் எதுவும் கிடைக்காததால் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுள்ளார். புகாரின் பேரில் போலிசார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

மதுரை அருகே 20 நாட்களுக்கு முன்பு மாயமான சிறுமி வீட்டின் பரணில் சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு..!!


இந்த நிலையில் வீட்டின் பரணில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த பிரியதர்ஷினி பரணில் ஏறி பார்த்தபோது அங்கு துணிமூட்டை ஒன்றில் இருந்து துர்நாற்றம் வருவது தெரியவந்தது. இதனையடுத்து அந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது மூட்டைக்குள் இருந்த வாளிக்குள் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமி கனிஷ்காவின் சடலம் அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு தாய் பிரியதர்ஷினி அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சிறுமியின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காளிமுத்து அடிக்கடி சந்தேகம் அடைந்து பிரியதர்ஷினியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் சிறுமி மாயமான தினத்தன்று அவரும் தலைமறைவானதால் சிறுமியை அவரே கொலை செய்து விட்டு தப்பிச்சென்றாரா? என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் காளிமுத்துவை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like