1. Home
  2. வர்த்தகம்

தமிழ்நாட்டில் ஐ போன் தொழிற்சாலை… 16,000 பேருக்கு வேலை!!

தமிழ்நாட்டில் ஐ போன் தொழிற்சாலை… 16,000 பேருக்கு வேலை!!

இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐ-போன் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், உலகிலேயே மிகப்பெரிய ஐ-போன் தொழிற்சாலை சீனாவில் மூடப்படும் நிலையில் இந்தியாவில் புதிய ஆலை தொடங்கப்படுகிறது.

இந்தியாவில் ஐ-போன் தயாரித்து வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தனது உற்பத்தியை 2 ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் ஐ போன் தொழிற்சாலை… 16,000 பேருக்கு வேலை!!

மேலும் அடுத்த 2 ஆண்டுகளில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 53,000 பேரை பணிக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது. ஃபாக்ஸ்கான், ஃபெகட்ரான், விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் புதிய ஐ-போன்களை தயாரித்து வருகின்றனர்.

ஓசூரில் அமையவுள்ள புதிய ஆலையில் 3 மாதங்களில் 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like