1. Home
  2. தமிழ்நாடு

ராகுல் காந்தி இல்லாமல் காங்கிரஸ் ஆலோசனை.. முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு?

ராகுல் காந்தி இல்லாமல் காங்கிரஸ் ஆலோசனை.. முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கட்சி பின்பற்ற வேண்டிய உத்திகள் குறித்து ஆலோசிக்க, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி வீட்டில் இன்று கூடுகிறார்கள்.


பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத் தொடர், வரும் 7 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர், பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலேயே நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்ற பின்னர் நடைபெறுகிற முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இதுதான்.

இந்த குளிர்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள் குறித்து, கட்சியின் மூத்த தலைவர்களுடன் மல்லிகார்ஜூன கார்கே இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


ராகுல் காந்தி இல்லாமல் காங்கிரஸ் ஆலோசனை.. முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு?


இந்தக் கூட்டத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ், மக்களவை காங்கிரஸ் தலைமை கொறடா கே.சுரேஷ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.மேலும் முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரமும், மணிஷ் திவாரியும் கலந்து கொள்ளக்கூடும். இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி எழுப்ப வேண்டிய பிரச்சினைகள், பின்பற்ற வேண்டிய உத்திகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ராகுல் காந்தி ஒற்றுமை பயணத்தில் பங்கேற்றுள்ளதால், கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார் என்று கூறப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like