1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்படுத்த கூடாது.. வெளியான புதிய உத்தரவு..!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்படுத்த கூடாது.. வெளியான புதிய உத்தரவு..!!

பக்தர்கள் யாரும் திருமலை திருப்பதி கோவிலுக்குள் செல்போன் எடுத்த செல்ல கூடாது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும் அவ்வாறே செல்போன்கள் கொண்டு போக அனுமதி இல்லை. செல்போன்களை டிக்கெட் வாங்கிக் கொண்டு லாக்கர்களில் வைத்துவிட வேண்டும். சாமி கும்பிட்டு திரும்பி வரும்போது டிக்கெட்டை கொடுத்து விட்டு செல்போன்களை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தநிலையில், தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கோவிலின் புனிதம் மற்றும் தூய்மையைக்காக்கும் விதமாக செல்போன் தடையை நடைமுறைப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து கோவில்களிலும் செல்போன்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைமுறை இனி அனைத்துக் கோவில்களிலும் பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Trending News

Latest News

You May Like