1. Home
  2. விளையாட்டு

பிரபல கால்பந்து ஜாம்பவான் மருத்துவமனையில் அனுமதி..!

பிரபல கால்பந்து ஜாம்பவான் மருத்துவமனையில் அனுமதி..!

சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கும் பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே, மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கடந்த ஆண்டு அவருக்கு பெருங்குடலில் சிறிய கட்டி (புற்றுநோய்) இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. இதையடுத்து அவர், மிகவும் பலவீனமாக காணப்பட்டார். இந்நிலையில், பீலேவுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து பீலேவின் மகள் கெல்லி நஸிமென்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எனது தந்தைக்கு பெருங்குடல் பகுதியில் பிரச்சனை ஏற்பட்டது. அதற்காக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நல்ல உடல் நிலையில் இருக்கிறார். டாக்டர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like