1. Home
  2. தமிழ்நாடு

போலி ரிசல்ட் – டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!!

போலி ரிசல்ட் – டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!!

இன்ஜினியரிங் பதவிக்கான தேர்வு முடிவு குறித்து, சமூக வலைதளங்களில் வரும் போலி பட்டியலை நம்ப வேண்டாம் என்று டி.என்.பி.எஸ்.சி. கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பதவிகளுக்கான போட்டித் தேர்வு, ஜூலை 2ஆம் தேதி நடைபெற்றது. அந்த தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டதாக, போலி பட்டியல், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதை நம்ப வேண்டாம்.


போலி ரிசல்ட் – டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!!

இதுபோன்ற பொய் தகவல்களை பரப்புவோர் மீது, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். டி.என்.பி.எஸ்.சி., நியமனங்கள் அனைத்தும், தேர்வு முடிவு தரவரிசைபடியே நடக்கின்றன. மேலும், வேலை வாங்கி தருவதாக கூறும் இடைத்தரர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் டி.என்.பி.எஸ்.சி எச்சரித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி.,யின் அனைத்து தேர்வு முடிவுகளும் http:// www.tnpsc.gov.in, www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். அதில் மட்டுமே தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like