அதிர்ச்சி! மதுபாட்டிலுடன் வகுப்புக்கு வந்த மாணவர்கள்!!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 19ஆம் தேதி 11ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்கள் மது போதையிலும் , மதுபாட்டிலுடனும் வகுப்பறைக்கு வந்துள்ளனர்.
இதைப்பார்த்து மற்ற மாணவ, மாணவியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து மது போதையில் இருந்த மாணவர்கள் ஆசிரியர்களிடம் தகராறு செய்துள்ளனர்.
இதனால் தலைமை ஆசிரியர் சுரேஷ் , மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனார்.
இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் இந்த சம்பவம் குறித்து விசாரித்தார் . பின்னர் 5 மாணவர்களையும் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இச்சம்பவம் சக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் வழியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
newstm.in