1. Home
  2. தமிழ்நாடு

முதியோர், மாற்றுத்திறனாளிகள் தரிசனம்: தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு..!

முதியோர், மாற்றுத்திறனாளிகள் தரிசனம்: தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு..!

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவச தரிசன டிக்கெட் பெறுவது குறித்த முக்கிய அறிவிப்பை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதற்காக, தேவஸ்தானம் சார்பில் 300 ரூபாய் தரிசன கட்டண டிக்கெட்டுகள் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

முதியோர், மாற்றுத்திறனாளிகள் தரிசனம்: தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு..!

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தரிசனம் செய்யும் வகையில் நாளை (24-ம் தேதி) காலை 10 மணிக்கு ஆன்லைனில் தரிசன டிக்கெட் வெளியிடப்படுகிறது. தரிசனத்திற்கு வர விரும்பும் பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்கிற தேவஸ்தான இணையதளத்தில் தரிசன டிக்கெட்களை பதிவு செய்துவிட்டு வரவேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பதியில் நேற்று 69,587 பேர் சுவாமி தரிசனம் செய்தனர். 28,645 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 4.35 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலானது. கடும் குளிர் மற்றும் மழையால் திருப்பதியில் தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் அவதியடைந்தனர்.

Trending News

Latest News

You May Like