1. Home
  2. தமிழ்நாடு

என்னம்மா யோசிக்கிறாங்க.. தலையில் டப்பா போட்டு கடையில் ஆட்டய போட்ட பலே திருடன்..!

என்னம்மா யோசிக்கிறாங்க.. தலையில் டப்பா போட்டு கடையில் ஆட்டய போட்ட பலே திருடன்..!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவர், காந்தி பஜாரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். நேற்று காலை கடையை திறந்து பார்த்தபோது, கல்லாவில் இருந்த ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து செஞ்சி காவல் நிலையத்தில் புகாரின் அளித்தார். இதன் பேரில், போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், கடையில் இருந்த சிசி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.


அதில், நள்ளிரவு 1 மணியளவில் கடையின் மேல் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர், கேமராவில் இருந்து தப்பிக்க தலையில் பிளாஸ்டிக் டப்பாவை கவிழ்த்து கல்லாவில் இருந்த பணத்தைத் திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இதையடுத்து, கைரேகை பிரிவு போலீசார் மற்றும் மோப்ப நாய் கொண்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like