1. Home
  2. தமிழ்நாடு

கருணை வேலை சலுகைதான், உரிமை அல்ல : நீதிமன்றம் அதிரடி!!

கருணை வேலை சலுகைதான், உரிமை அல்ல : நீதிமன்றம் அதிரடி!!

கருணை ரீதியிலான வேலை சலுகைதானே தவிர அதை உரிமையாக பெற முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரளாவை சேர்ந்த அணு ஸ்ரீ என்பவரின் தந்தை திருவாங்கூர் உரம் மற்றும் இரசாயன கழகத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் 1995ஆம் ஆண்டு தனது பணிக்காலத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவியும் அரசு ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.

இதனால், கருணை அடிப்படையில் மனைவிக்கு அவரின் வேலையை தர வேண்டும் என்ற சூழலும் விதியும் ஏற்படவில்லை. இந்நிலையில், தந்தை இறந்து 14 ஆண்டுகள் கழித்து அணுஸ்ரீ கருணை அடிப்படையில் தனக்கு அரசு வேலை வேண்டும் என கேட்டுள்ளார்.

அவரது தாயாரும் அரசு வேலையில் உள்ளார், 14 ஆண்டுகள் கடந்துவிட்ட காரணங்களால் அணுஸ்ரீ மனு நிராகரிக்கப்பட்டது. இந்த விவகாரம் கேரளா உயர் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், கருணை அடிப்படையில் வேலை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


கருணை வேலை சலுகைதான், உரிமை அல்ல : நீதிமன்றம் அதிரடி!!

அரசு விதிகளின் படி இது பொருந்தாது என கருணை மனுவை மீண்டும் திருவாங்கூர் உரம் மற்றும் இரசாயன கழகம் நிராகரித்தது. இதை எதிர்த்து அணுஸ்ரீ உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

அந்த வழக்கில், கருணை அடிப்படையிலான வேலை என்பது உரிய ஆதரவோ வாழ்வாதாரமோ இல்லாத நபர்களுக்கு அவர்களின் சூழல் கருதி வழங்கப்படுகிறது. மனு தாரரின் தாயார் அரசு பணியில் உள்ளார்.

அதே போல் தந்தை இறந்து பல ஆண்டுகள் கழித்து கருணை அடிப்படையில் வேலை கேட்பது என்பது அதன் அடிப்படை நோக்கத்தை மீறுவதாகும். எனவே, கருணை அடிப்படையில் வேலை என்பது சலுகைதானே ஒழிய உரிமை இல்லை எனத் தீர்ப்பில் கூறியுள்ளது.

எனவே,பணி வழங்க வேண்டும் என்ற கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like