1. Home
  2. தமிழ்நாடு

ஸ்கூட்டியில் எட்டிப்பார்த்த பாம்பு... அலறி அடித்து ஓடிய பெண்!!

ஸ்கூட்டியில் எட்டிப்பார்த்த பாம்பு... அலறி அடித்து ஓடிய பெண்!!

கரூர் மாவட்டம் பவித்திரம் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா என்பவர் தனது மகன் மற்றும் தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது கரூர் ரவுண்டானா அருகே சென்றுகொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தின் முன் பகுதியில் இருந்து திடீரென பாம்பு வெளியேறியுள்ளது.

இதனால் பயந்துபோன சரண்யா உடனே வாகனத்தை நிறுத்தி விட்டு மகன் மற்றும் தாயை கூட்டிக் கொண்டு நகர்ந்து சென்றுவிட்டார். இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


ஸ்கூட்டியில் எட்டிப்பார்த்த பாம்பு... அலறி அடித்து ஓடிய பெண்!!


தகவலின் பேரில் வந்த தீயணைப்புத்துறையினர், வண்டியின் பாகத்தை திறந்துபார்த்தபோது அடியில் பாம்பு இருப்பதை கண்டனர். இதையடுத்து பாம்பு பிடி வீரரை அழைத்து சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு இரண்டு அடி நீள சாரை பாம்பை மீட்டனர்.

பாம்பை பிடிப்பதற்காக வாகனம் முழுக்க அனைத்து பாகங்களும் பிரிக்கப்பட்டதால், மெக்கானிக்கை வரவழைத்து வண்டியை பழுது பார்க்க கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் வேறொரு வாகனத்தில் தங்கள் வீட்டிற்கு சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தளது.

newstm.in

Trending News

Latest News

You May Like