உலக கோப்பை போட்டியிலிருந்து பும்ரா விலகல்... அதிகாரபூர்வ அறிவிப்பு..!! ரசிகர்கள் அதிர்ச்சி
உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரீத் பும்ரா முதுகுவலி காயம் காரணமாக விலகியதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியாகி இருந்தது.இருப்பினும் 20 ஓவர் உலகக்கோப்பையில் பும்ரா விளையாட இன்னும் வாய்ப்பு இருப்பதாக சவுரவ் கங்குலி 2 தினங்களுக்கு முன் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரிலிருந்து ஜஸ்பிரீத் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
உலகக்கோப்பை தொடரில் பும்ரா பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் கலந்த வருத்தத்தில் உள்ளனர்.விரைவில் பும்ரா குணமடைந்து கிரிக்கெட் களத்தில் இறங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.