உதவி கேட்ட மாணவிக்கு உடனடியாக உதவிய ஜி.வி!!
தேர்வு கட்டணம் செலுத்த உதவி கேட்ட மாணவிக்கு, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் உடனடியாக ஜி பே மூலம் பணம் அனுப்பியதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தமிழர் நலனுக்காக பல்வேறு தருணங்களில் குரல் கொடுத்துள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டங்களின்போது ஜி.வி. பிரகாஷ் ஆர்வம் காட்டியது பாராட்டைப் பெற்றது.
ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து வரும் ஜி.வி. பிரகாஷிடம், கல்லூரி மாணவி ஹேமப்ரியா என்பவர் உதவி கேட்டிருந்தார். மாணவி தனது ட்விட்டர் பதிவில், 'ஹாய் சார், நான் ஹேமப்ரியா, கும்பகோணம். நான் பிசிஏ படித்து வருகிறேன். இந்த மாதம் தேர்வு தொடங்குகிறது. அதற்கான ஃபீஸ் கட்ட உதவி செய்யுங்கள்' என்று கூறியுள்ளார்.
இதன்பின்னர் மாணவி சொன்ன ஜி பே ஃபோன்நம்பருக்கு ஜி.வி. பிரகாஷ் பணத்தை அனுப்பியுள்ளார். இதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஆனால், மாணவி ஒரு ஃபேக் ஐடி என ஜி.வி. பிரகாஷின் ரசிகர்கள் சிலர் சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.
இதுதொடர்பான பதிவுகளும், ரீப்ளேயும் அதிகம் காணப்படுகிறது. உதவியைப் பெற்ற மாணவி 'உதவியதற்கு நன்றி சார், எனக்கு தேர்வு இருக்கிறது. சிறப்பாக வாழ்த்தவும் என்று கூறியுள்ளார்.
newstm.in