1. Home
  2. தமிழ்நாடு

பேரனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த தாத்தா குளத்தில் மூழ்கி பலி..!!

பேரனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த தாத்தா குளத்தில் மூழ்கி பலி..!!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் கீரை தோட்ட தெருவில் வசித்து வருபவர் சுடைலையாண்டி. இவரது பேரன் அஸ்வின் (8). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் தன் பேரனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க சுடைலையாண்டி முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து பேரனை கீழப்பாவூர் உள்ள பெரிய குளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுவன் முதுகில் காலி பிளாஸ்டிக் கேன் கட்டி நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது திடீரென சிறுவனின் முதுகில் கட்டி இருந்த காலி பிளாஸ்டிக் கேன் கழன்று விழுந்துள்ளது.

பேரனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த தாத்தா குளத்தில் மூழ்கி பலி..!!

இதனால் சிறுவன் அஸ்வின் தண்ணீரில் தத்தளித்துள்ளான். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பேரனை சுடைலையாண்டி கரையில் சேர்க்க முயன்றபோது நீரில் மூழ்கியுள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் உடனே தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சிறுவனைப் பத்திரமாக மீட்டனர். ஆனால் பல மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு சுடைலையாண்டியை சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த தாத்தா குளத்தில் மூழ்கி பலி..!!

பேரனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த தாத்தா குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Trending News

Latest News

You May Like