1. Home
  2. தமிழ்நாடு

தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு..!!

தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு..!!

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன். இவருடைய 2-வது மகள் கீர்த்தனா (17). இவர் நம்பியூரில் உள்ள அரசு கலை கல்லூரியில் பி.ஏ.முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவா் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் கீர்த்தனா இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று காலை லட்சுமணன் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த கீர்த்தனா செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை கண்டார். உடனே அவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்த கீர்த்தனாவை கண்டித்தார். பின்னர் சாப்பிட்டு விட்டு வேலைக்கு செல்லும்போது செல்போனை கீர்த்தனாவிடம் இருந்து வாங்கிக்கொண்டு சென்றதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த கீர்த்தனா வீட்டில் உள்ள மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார். வேலை முடிந்து மாலையில் வீட்டுக்கு லட்சுமணன் வந்து உள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவர் தனது மகள் கீர்த்தனாவை அழைத்தார். ஆனால் சத்தம் இல்லை.


தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு..!!

இதனால் சந்தேகமடைந்த லட்சுமணன் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார். அப்போது தூக்கில் கீர்த்தனா தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் கீர்த்தனாைவை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கீர்த்தனா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like