1. Home
  2. விளையாட்டு

இந்திய அணி அபார வெற்றி.!

இந்திய அணி அபார வெற்றி.!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. இறுதியாக போட்டி 8 ஓவர்களாக (ஒரு அணிக்கு ) குறைக்கப்பட்டு டாஸ் போடப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.தொடக்க வீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் கேமரூன் கிரீன் களமிறங்கினர். 8 ஓவர் போட்டி என்பதால் முதல் பந்து முதலே ஆஸ்திரேலிய வீரர்கள் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தனர். ஆனால் இந்த பாணி கேப்டன் பின்ச்-ஐ தவிர பிறருக்கு பயனளிக்க வில்லை.


இந்திய அணி அபார வெற்றி.!


கேமரூன் கிரீன் (5 ரன்கள்) ரன் அவுட்டாகி ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் (டக் அவுட்) மற்றும் டிம் டேவிட் (2 ரன்கள்) அக்சர் படேல் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினர். 5-வது ஓவரின் கடைசி பந்தில் ஆஸ்திரேலிய அணி 46 ரன்கள் சேர்ந்திருந்த போது அதிரடியாக விளையாடி வந்த பின்ச் பும்ரா பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார்.ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் குவித்தது. வேட் 20 பந்துகளில் 41 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.இதை தொடர்ந்து 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

இந்திய அணி அபார வெற்றி.!

இதனைத்தொடர்ந்து 91 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, ரோஹித் ஷர்மா - கேஎல் ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை நட்சத்திர வீரர் ஹேசல்வுட் வீச, ரோஹித் ஷர்மா அடுத்தடுத்து இரு இமாலய சிக்சர்களை விளாசி அசத்தினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா படைத்தார். இந்த போட்டிக்கு முன்னதாக 172 சிக்சர்களுடன் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில் உடன் முதல் இடத்தில் இருந்தார் ரோகித் சர்மா. இந்த நிலையில் இன்று அவரின் சாதனையை முறியடித்து சர்வதேச டி20களில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் (176) பெற்றுள்ளார்.

இறுதியாக இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Trending News

Latest News

You May Like