1. Home
  2. தமிழ்நாடு

வளைத்து நெளித்து போடப்பட்ட சாலை!!

வளைத்து நெளித்து போடப்பட்ட சாலை!!

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் தற்போது புதிய சாலை போடும் பணிகள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இரவு நேரங்களில் தொடங்கி அதிகாலை வரை மட்டுமே பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் கவுண்டம்பாளையம் எருக்கம்பெனி பகுதியில் தற்போது புதிய சாலை போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பழுதடைந்த மின் மயான வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களை அப்புறப்படுத்தாமல் சாலை போடும் பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

அந்த வாகனங்கள் நிற்கும் பகுதியில், வாகனங்களுக்கு ஏற்றபடி சாலையை வளைத்து நெளித்து சாலையை போட்டுள்ளனர். சாலை பணிகளை மேற்கொள்ளும் முன் அந்த இடங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலைகளை போடுவதால் அது பயனளிக்கும் விதமாக இருக்காது என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.


வளைத்து நெளித்து போடப்பட்ட சாலை!!

முன்னதாக வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பைக்கை எடுக்காமல், ஜீப்பை எடுக்காமல், அடி பம்பை அப்படியே விட்டு தார் சாலை அமைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பிறகு புகாரின் பேரில் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்போது கோவையில் வாகனங்கள் நிற்பதற்கு ஏற்ப சாலைகள் அமைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like