1. Home
  2. தமிழ்நாடு

விசிகவை தொடர்ந்து காங்கிரஸ்.. தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிப்பு..!

விசிகவை தொடர்ந்து காங்கிரஸ்.. தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிப்பு..!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனைத் தொடர்ந்து, குடியரசு தினவிழாவை முன்னிட்டு கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

நாடுமுழுவதும் நாளை (ஜன. 26-ம் தேதி) குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கவர்னர் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றிவைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்பார்.


ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பாக நடைபெறும். தற்போது அங்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், இந்த ஆண்டு குடியரசு தினவிழா கொண்டாட்டம் காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிலையில், குடியரசு தினவிழாவை முன்னிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கவர்னர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

Trending News

Latest News

You May Like