1. Home
  2. தமிழ்நாடு

பிரபல இயக்குனரும் நடிகருமான கே.எஸ் ரவிக்குமார் தாயார் காலமானார்..!

Q

இயக்குனர் விக்ரமன் உட்பட பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார் கே.எஸ் ரவிக்குமார்.பல வருடங்கள் உதவி இயக்குனராக பணியாற்றிய கே.எஸ் ரவிக்குமார் 1991 ஆம் ஆண்டு வெளியான புரியாத புதிர் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனரானார். அப்படம் ஓரளவிற்கு வெற்றிபெற்றதை தொடர்ந்து அடுத்ததாக சரத்குமார் நடிப்பில் சேரன் பாண்டியன் என்ற திரைப்படத்தை இயக்கினார் கே.எஸ் ரவிக்குமார்.

அப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.அப்படம் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடிக்க அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய துவங்கின. அதன் பிறகு மீண்டும் சரத்குமாரை வைத்து நாட்டாமை என்ற திரைப்படத்தை இயக்கினார் கே.எஸ் ரவிக்குமார். அப்படத்தின் வெற்றி அவரை முன்னணி இயக்குனராக உருவெடுக்க செய்தது.

அதன் பிறகு தான் கே.எஸ் ரவிக்குமாருக்கு ரஜினி, கமல் ஆகியோரை இயக்கம் வாய்ப்பு வந்தது. ரஜினியை வைத்து முத்து என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த கே.எஸ் ரவிக்குமார் கமலை வைத்து அவ்வை ஷண்முகி, தெனாலி, பஞ்ச தந்திரம், தசாவதாரம் என பல வெற்றிப்படங்களை கொடுத்து கமலின் ஆஸ்தான இயக்குனராக மாறினார்.

கமலுக்கு மட்டுமல்லாமல் ரஜினிக்கும் முத்து, படையப்பா என மெகாஹிட் படங்களை கொடுத்தார். அதைத்தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, சிம்பு என அனைத்து முன்னணி இயக்குனர்களுடனும் பணியாற்றியுள்ளார் கே.எஸ் ரவிக்குமார். 

இந்நிலையில் ரவிக்குமாரின் தாயாரான ருக்மணி அம்மாள் நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக 88 வயதில் காலமானார். இந்த செய்தி திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரின் இறுதி சடங்குகள் இன்று மதியம் 2 .30 மணிக்கு கே.எஸ் ரவிக்குமாரின் இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like