சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு சிபிஎஸ்இ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
* 75 சதவீதம் வருகைப்பதிவு உள்ள மாணவர்கள் மட்டுமே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுத முடியும்.
* புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-இன் படி பள்ளியில் உள்மதிப்பீடு கட்டாயம்
* இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக மதீப்பீடு நடைபெறும். இதில் பங்கேற்காதவர்கள் ரிப்பீட் பிரிவில் வைக்கப்படுவார்கள்.
* 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் 2 ஆண்டுகள் முழுமையாக படித்தால் தான் தேர்வு எழுத தகுதி உடையவர்கள்.
* அதாவது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் 9 மற்றும் 10 ஆம் வகுப்பினை இரண்டு ஆண்டுகளையும் சேர்த்து படித்து இருக்க வேண்டும்.
* 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பின் இரண்டு ஆண்டுகளையும் சேர்த்து படித்து இருக்க வேண்டும்.