1. Home
  2. தமிழ்நாடு

வருமான வரி சோதனை நிறைவு..!

வருமான வரி சோதனை நிறைவு..!

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை இன்று நடத்தினர். செந்தில் பாலாஜி சகோதரர் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடியாக இன்று காலை முதல் சோதனை நடத்தினர்

இந்நிலையில் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்தது. சோதனை முடிவில் ஒரு லேப்டாப், ஒரு ஐபேட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவரது வீட்டில் ரூ.30,000 வைக்கப்பட்டிருந்த லாக்கருக்கும் அதிகாரிகள் சீல் வைத்து சென்றதாக தெரிகிறது.

Trending News

Latest News

You May Like