1. Home
  2. தமிழ்நாடு

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்..!! இனி உங்கள் ஊருக்கு வழக்கமான நேரத்தை விட முன்னதாக செல்லலாம்..!

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்..!! இனி உங்கள் ஊருக்கு வழக்கமான நேரத்தை விட முன்னதாக செல்லலாம்..!

சென்னை எழும்பூரிலிருந்து மதுரை வரை இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மதுரையிலிருந்து நாகா்கோவிலுக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் மதுரை முதல் திருநெல்வேலி வரையிலான பணி நிறைவடைந்துள்ளது.

மேலும், வாஞ்சி மணியாச்சி முதல் தூத்துக்குடி வரையும், திருநெல்வேலி முதல் நாகா்கோவில் வரையும் இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அங்கு இயக்கப்படும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் இரட்டை ரயில்பாதை பணி நிறைவு பெறவுள்ள நிலையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி செல்லும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது கோவை-நாகா்கோவில் விரைவு ரயில், சென்னை எழும்பூா்-கன்னியாகுமரி விரைவு ரயில்கள் முன்பை விட முன்னதாக வந்து சேருகின்றன.

இந்தப் பகுதியில் பணி நிறைவடையும் நிலையில் அனைத்து ரயில்களும் முன்பை விட 10 முதல் 20 நிமிடங்கள் முன்னதாக வந்து சேரும். மேலும், செங்கோட்டை-நெல்லை வழித் தடத்தில் இயக்கப்படும் ரயில்களும் வழக்கமான நேரத்தை விட முன்னதாக இயக்கப்படுகிறது. ரயில்களின் வேக அதிகரிப்பு பற்றி விரைவில் அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like