1. Home
  2. தமிழ்நாடு

நாங்கள் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பங்கேற்போம் : அன்புமணி ராமதாஸ்..!

நாங்கள் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பங்கேற்போம் : அன்புமணி ராமதாஸ்..!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், தற்போதைய நாடாளுமன்ற வளாகம் 96 வருடங்களுக்கு முன்பு கட்டமைக்கப்பட்டது. அதிகரிக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளுக்கான தேவைகள் விரிவடைந்து வருவதால், புதிய நாடாளுமன்ற வளாகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த 2020- ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் புதிய நாடாளுமன்ற வளாகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கொரோனா பெருந்தொற்று பாதிப்பையும் கடந்து கட்டமைப்பு பணிகள் விரைவாக நடந்து முடிவடைந்துள்ளன. புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட நாடாளுமன்றக் கட்டடத்தை வரும் மே 28- ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மே 28ம் தேதி அன்று நடைபெற உள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம், ஆர்ஜேடி, விசிக உள்ளிட்ட கட்சிகளும் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்கின்றன.

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தில்லியில் வரும் 28-ஆம் நாள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பா.ம.க. கலந்து கொள்ளும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.





Trending News

Latest News

You May Like