1. Home
  2. தமிழ்நாடு

கட்சியினருக்கு ஓ.பி.எஸ்.வேண்டுகோள்..!!

கட்சியினருக்கு ஓ.பி.எஸ்.வேண்டுகோள்..!!

ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தின் போது, தாய் மொழியாம் நம் தமிழ் மொழி காக்கப்பட வேண்டும் என்பதற்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் நாள் மொழிப் போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

அன்னைத் தமிழுக்காக உயிர் துறந்த மாவீரர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அ.தி.மு.க. சார்பில் வரும் 25-ம் தேதி புதன்கிழமை அன்று, கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டத் தலைநகரங்களில் மொழிப் போர்த் தியாகிகளின் திருவுருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்துமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி நிகழ்ச்சியில், அந்தந்த மாவட்டங்களில் உள்ள தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்ட, கிளை அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி கொண்டிருக்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like