1. Home
  2. தமிழ்நாடு

இன்று வைகாசி அமாவாசை : மறக்காம முன்னோர்களுக்கு திதி கொடுங்க..!!

இன்று வைகாசி அமாவாசை : மறக்காம முன்னோர்களுக்கு திதி கொடுங்க..!!

அமாவாசை என்பது இந்துக்களின் முக்கிய வழிபாட்டு நாட்களில் ஒன்றாகும். சந்திரன் முழுவதுமாக தேய்ந்து, மறைந்து காணப்படும் இந்த நாள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாகும். அதுவும் முன்னோர் வழிபாடு, பித்ரு கடன் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு உரிய நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து நமது முன்னோர்களுக்கும், மறைந்த உறவினர்களுக்கு தர்ப்பணம் அளிக்கும் வழக்கம் உள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசையும், பெளர்ணமியும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு பெற்றதாகும். அப்படி 2023 ம் ஆண்டின் மே மாதத்தில் வரும் அமாவாசைக்கு கூடுதல் தனிச்சிறப்பு உள்ளது.அதாவது இந்த மே மாத அமாவாசை வெள்ளிக்கிழமையில் வருகிறது. வெள்ளிக்கிழமையில் வரும் அமாவாசைக்கு சுக்கிர வார அமாவாசை என்று பெயர்.

இன்று வைகாசி அமாவாசை : மறக்காம முன்னோர்களுக்கு திதி கொடுங்க..!!

இன்று அதிகாலையில் எழுந்து, நீராடி, பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.அந்தணர்களுக்கு தானம் வழங்க வேண்டும். காகத்திற்கு வெள்ளை மற்றும் கருப்பு எள் கலந்த சாதம் வைக்க வேண்டும். நமது முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து, படையல் இட்டு வழிபட வேண்டும். இவ்வாறு செய்தால் அன்றைய தினம் நாம் என்ன வேண்டிக் கொள்கிறோம் அது அப்படியே நடக்க முன்னோர்கள் ஆசி வழங்குவார்கள்.

அதே போல் இந்த ஆண்டு மே மாதம் வரும் அமாவாசையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், முருகப் பெருமானுக்கு உரிய கிருத்திகை நட்சத்திர நாளில் வருகிறது. இதனால் இந்த நாளில் முன்னோர்களின் அருளுடன் முருகப் பெருமானின் அருளையும் பெற முடியும்.

இன்று வைகாசி அமாவாசை : மறக்காம முன்னோர்களுக்கு திதி கொடுங்க..!!

பொதுவாக அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுத்த பிறகு சிவன் கோவிலுக்கோ அல்லது முருகன் கோவிலுக்கோ சென்று வழிபட வேண்டும் என்று சொல்வார்கள். சிவ பெருமான் ,ஆதி நாயகன் என்பதாலும், முருகப் பெருமான் தகப்பனுக்கே மந்திர உபதேசம் செய்து தகப்பன் சாமி என பெயர் பெற்றவர் என்பதாலும், முருகப் பெருமான் சிவனின் அம்சமாக திகழ்பவர் என்பதாலும் அமாவாசை நாட்களில் முருகப் பெருமானை வழிபடுவது சிறப்பானது.

வெள்ளிக்கிழமையில் வரும் அமாவாசை நாளில் கிருத்திகையுடன் இணைந்து வருவதால் இந்த அமாவாசை மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் வீட்டிலேயே காகத்திற்கு கறுப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த அன்னம் வைத்து வழிபடலாம். பசு மாட்டிற்கு பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம் கலந்து தானமாக கொடுக்கலாம். இவ்வாறு செய்வதால் கோமாதாவின் அருள் கிடைத்து, செல்வ வளம் பெருகும்.

Trending News

Latest News

You May Like