உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்கா பவுலிங்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், 5-ஆவது லீக் போட்டியில் இன்று தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் இந்த போட்டி தொடங்கவுள்ளது.
முன்னதாக, இப்போட்டிக்காக டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டூப்ளஸ்சி, தனது அணியை முதலில் பவுலிங்கை செய்ய தீர்மானித்துள்ளார்.
இரு அணி வீரர்கள் விவரம்
தென்னாப்பிரிக்கா: டி காக், மார்க்ராம், டூப்ளஸ்சி (கேப்டன்), வாண்டர் டஸ்ஸன், டுமினி, ஆண்ட்லி, மில்லர், மோரிஸ், ரபாடா, நிகிடி, இம்ரான் தாஹீர்.
வங்கதேசம்: தமீம் இக்பால், சர்கார், ஷாகிப் அல் அசன், ரஹீம், மிதுன், மஹமுதுல்லா, ஹூசைன், சைய்பூதின், ஹசன், மோர்டசா (கேப்டன்), ரஹ்மான்.
newstm.in
newstm.in