பாகிஸ்தானுக்கு செல்லும் இந்திய டென்னிஸ் அணி
55 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் விளையாடுவதற்காக இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் நாட்டிற்கு செல்கிறது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ‘டை’ சுற்று செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் நடைபெறுகிறது. இது பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான போட்டி அல்ல, டேவிஸ் கோப்பை என்பது உலகக்கோப்பை தொடர் போன்றது என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், உலகக்கோப்பை தொடர் போன்றது என்பதால் ஒலிம்பிக் சாசனத்தை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.
newstm.in
newstm.in