1. Home
  2. விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து - சென்னையை வீழ்த்தியது மும்பை

ஐ.எஸ்.எல். கால்பந்து - சென்னையை வீழ்த்தியது மும்பை

சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணியை 1- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.

5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. சென்னையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி அணியும், மும்பை சிட்டி எப்.சி அணியும் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் 20-வது நிமிடத்தில் மும்பை சிட்டி எப்.சி அணியின் வீரர் மடாவ் சுகோவ் அடித்த முதல் கோல் மூலம் முன்னிலை வகித்தனர். ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், சென்னையின் எப்.சி அணியை 1- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மும்பை சிட்டி எப்.சி. அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை சிட்டி எப்.சி. அணி மூன்றாவது வெற்றியை பெற்றுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like