36வது தேசிய விளையாட்டுப் போட்டியில் மீராபாய் சானு தங்கம் வென்றார்..!!
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த மீராபாய் சானு, தேசிய விளையாட்டுப் போட்டியின் பளுதூக்குதல் பிரிவில் எதிர்பார்த்தபடியே தங்கம் வென்று அசத்தினார். பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இவர் மொத்தம் 191 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார்.
இந்த பிரிவில் சஞ்சிதா சானு வெள்ளிப் பதக்கமும் (187 கிலோ), ஒடிசாவின் ஸ்னேகா சோரன் வெண்கலப் பதக்கமும் (169 கிலோ) வென்றனர்.