1. Home
  2. விளையாட்டு

இறுதி போட்டிக்கு நுழைந்த அணி இது தான்..!!

இறுதி போட்டிக்கு நுழைந்த அணி இது தான்..!!

ஐபிஎல் தொடரின் 2வது குலிபையர் போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை எதிர்க்கொள்ளும். அதன்படி குலிபையர் 2-ல் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சு தேர்வு செய்தது.இந்த போட்டியில் சுப்மன் கில் 60 பந்துகளில் 7 பவுண்டர்கள், 10 சிக்சர்கள் உள்பட 129 ரன்கள் குவித்து அவுட் ஆனார். சாய் சுதர்சன் 43 ரன்கள் எடுத்தார். இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மும்பை தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, நேஹல் வதேரா களமிறங்கினர்.

வதேரா 4 ரன்னிலும், கேப்டன் ரோகித் சர்மா 8 ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அடுத்து களமிறங்கிய திலக் வர்மா 43 ரன்னிலும், கமரூன் கிரீன் 30 ரன்னிலும் அவுட் ஆகினர். சற்று நிலைத்து நின்று ஆடிய சூர்யகுமார் 38 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்சை 62 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் குஜராத் டைட்டன்ஸ் நுழைந்துள்ளது.


Trending News

Latest News

You May Like