Logo

மொட்ட கடிதாசி (சரஹா) க்கு முற்றுப்புள்ளி வைத்த கூகுள்

கடந்த சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்த மொட்டைகடிதாசி முறையான சரஹா ஆப் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
 | 

மொட்ட கடிதாசி (சரஹா) க்கு முற்றுப்புள்ளி வைத்த கூகுள்

மொட்ட கடிதாசி (சரஹா) க்கு முற்றுப்புள்ளி வைத்த கூகுள்

கடந்த சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்த மொட்டைகடிதாசி முறையான சரஹா ஆப் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

யாரு வேண்டுமாணாலும் யாருக்கு வேண்டுமானாலும் மெசெஜ் செய்ய முடியும் அதுதான் சரஹா. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகமான இந்த அப்ளிகேஷன் கூகுள் ப்ளே ஸ்டோரில் லட்சக்கணக்கானவர்களால் டவுன்லோட் செய்யப்பட்டது. அதாவது ஒருவரின் சுய அடையாளத்தை மறைத்துக்கொண்டு ரகசியமாக மெசேஜ் அனுப்பும் வசதியை அளிக்கும் சரஹா அப்ளிகேஷன். யாரிடமிருந்து மெசெஜ் வரப்பட்டது, எங்கிருந்து வரப்பட்டது என தெரியாது. மேலும் அதற்கு பதிலளிக்கவும் முடியாது.

கடந்த சில நாட்களுக்கு முன் இந்த மொட்ட கடிதாசி முறை இளைஞர்களின் மத்தியில் பிரபலமாக உலாவந்து கொண்டிருந்தது. சரஹா ஆப் மூலம் தன் காதலை வெளிப்படுத்திய எத்தனையோ கோமாளிகளும் உள்ளனர். 

நம் பெயர் தெரியாதபடி யாருக்கு வேண்டுமானாலும் மெசேஜ் செய்யும் வசதியை கொண்ட சரஹா ஆப்பை பயன்படுத்துபவர்களின் மொபைல் மூலம் பல தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது என பல புகார்கள் வந்தன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேத்ரினா காலின்ஸ் என்ற பெண் பாலியல் தொந்தரவு கொடுக்கும் விதமாக மெசேஜ்கள் குவிகின்றன என்று கூறி சரஹாவை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்க வேண்டும் என்று இணையத்தில் மனு (Petition) ஒன்றை அளித்திருந்தார். அவருக்கு ஆதரவாக அவர் உருவாக்கிய மனுவில் 4.7 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். இதன் எதிரொலியாக கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து சரஹாவை நீக்கிவிட்டது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP