பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசிலியா சென்றார் பிரதமர் நரேந்திர மோடி
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர நரேந்திர மோடி பிரேசிலியா சென்றடைந்தார். பிரேசில் தலைநகர் விமான நிலையத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Nov 13, 2019, 20:01 IST
| பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர நரேந்திர மோடி பிரேசிலியா சென்றடைந்தார். பிரேசில் தலைநகர் விமான நிலையத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாடுகளின் மாநாடு பிரேசிலில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. அறிவியல், தொழில்நுட்பம், டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.
மாநாட்டின் போது சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்டோரை பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியாக சந்தித்துப் பேசவுள்ளார்.
newstm.in